உறவின் கதை

Add comment அக்டோபர் 25, 2009

ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல்

ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல்  (20.10.2009) நேற்று திறந்துவைக்கப்பட்டது.

தூரம் : 11.5 கி.மீ


Add comment அக்டோபர் 21, 2009

நடையால் வென்ற உலகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்  எழுதிய ”நடையால் வென்ற உலகம்”  என்ற பதிவைப் படித்து விட்டு சில தினங்கள் உறக்கமற்று அலைந்து கொண்டிருந்தேன்.

தன்னம்பிக்கையையும், மனித நேயத்தையும், சூழலியலையும் ஒருங்கே வலியுறுத்தும் வெகு அற்புதமான பதிவு அது.

அப்பதிவு சதிஷ்குமார் என்ற ஒரு (அ)சாதாரண மனிதரைப் பற்றியது. படித்து விட்டு அவரைப் பற்றி இணையத்தில் தேடிய போது SATISH KUMAR -The RADIANT SEED by Teone Reinthal என்ற ஒர் ஆவணப் படம் சிக்கியது.

அந்த ஆவணப் படம் இதோ உங்களின் பார்வைக்கு


-

இப்படத்திற்கு எஸ்.ரா வின் விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார்.

முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

(மேலும்…)

2 comments அக்டோபர் 19, 2009

ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை எவ்வாறு இனம் காண வேண்டும்

ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை யார் நல்லவர் யார் கெட்டவர் என எவ்வாறு இனம் காணுவது  என்று மேதகு.பிரபாகரன் உடன் இருந்த செல்வா கூறுவன

Add comment அக்டோபர் 1, 2009

இந்தியாவில் பிரபாகரன்…

இந்தியாவில் பிரபாகரன் 1980களில்…

1 comment செப்டம்பர் 18, 2009

பூமாலை வாங்கிவந்தான்

2007 ல் கேரள ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் ’இளையராஜா ஹிட்ஸ்’ தலைப்பின் கீழ் ஒரு மலையாள போட்டியாளரின் தமிழ் பாடலும் அதற்கு நடுவர்களின் தீர்ப்பும்…..

-

நன்றி : http://raghadevan.blogspot.com

-

Add comment செப்டம்பர் 11, 2009

ராஜசேகர் ரெட்டி 1949 – 2009

Add comment செப்டம்பர் 3, 2009

ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

ம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்….

நன்றி : ம.க.இ.க

1 comment ஆகஸ்ட் 31, 2009

பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே – எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே – சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே – இது
நாடா இல்லே வெறும் காடா? – இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா – இது
நாடா இல்லே வெறும் காடா? இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே – எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே – எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே – எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே – இது
நாடா இல்லே வெறும் காடா? – இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா – இது
நாடா இல்லே வெறும் காடா? – இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
வரிகள் : புலமைபித்தன்

1 comment ஆகஸ்ட் 15, 2009

1940களில்- மலேசியா

Add comment ஜூலை 16, 2009

Previous Posts


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !