Archive for நவம்பர், 2008

நான்கு குறும்படங்கள்

பெர்னான்டோ சொரன்டினோ (Fernando Sorrentino) அர்ஜென்டினாவைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை தமிழில் மொழியாக்கம் செய்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எம்.எஸ். அவர்கள் மொழியாக்கம் செய்துள்ள இந்த தொகுப்பில் அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான் என்ற சிறுகதை உள்ளது. இந்தக் கதை உலகப்புகழ் பெற்ற சிறுகதையாகும்.

fs

தன்னுடைய தலையில் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு ஆள் குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லும் ஒரு ஆளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கதை விவரிக்கிறது.

பூங்காவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைத் திடீரென ஒருவன் குடையால் தலையில் அடிக்க துவங்குகிறான். இதில் ஆத்திரமான பேப்பர் படிப்பவன் அவனைத் தாக்குகிறான். அடிபட்டு கிழே விழுந்த போதும் குடைக்காரன்  தன் வலியைப் பற்றிய கவலையின்றி எழுந்து திரும்ப தலையில் அடிக்கத் துவங்குகிறான்.

குடையால் அவன் மிக மெதுவாக அடிப்பதால் அது ஈ உட்காருவது போன்ற உணர்ச்சியை தான் தருகிறது. ஆனால் அதற்கு ஏன் கோபப்பட்டு அவனை அடித்தோம் என்று செய்திதாள் படிப்பவன் கவலைபடுகிறான். ஒருவேளை அவன் பைத்தியமாக இருப்பானோ என்று நினைத்து அவனிடமிருந்து தப்பி ஒடுகிறான். குடைக்காரனும் பின்னாடியே ஒடி வருகிறான்.

தப்பி பேருந்தில் ஏறிய போதும் அவனும் கூடவே ஏறி பேருந்திற்குள்ளும் தலையில் குடையால் அடித்தபடியே வருகிறான். அதைக் கண்டு பேருந்தில் வருகின்றவர்கள் பரிகாசம் செய்கிறார்கள்.

வீட்டிற்கு வந்து கதவைப் பூட்ட முயன்ற போது அவனும் வீட்டிற்குள் வந்துவிடுகிறான். அதன்பிறகு எல்லா நாளும் பகலும் இரவும் உறங்காமல் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். இப்போது அது பழகிப் போய் அவனிடம் அடிவாங்காமல் தூக்கம் வருவதில்லை என்று கதை முடிகிறது.

இந்தச் சிறுகதையை வெவ்வேறு தேசத்தை சேர்ந்த நான்கு இயக்குனர்கள் குறும்படமாக எடுத்துள்ளார்கள்.

ஒரே கதை எப்படி நான்கு இளம் இயக்குனர்களால் மாறுபட்டு படமாக்கட்டிருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதற்கு இந்தக் குறும்படங்கள் உதவி செய்யக்கூடும்.

குறும்படம் 1 :


குறும்படம் 2 :

குறும்படம் 3 :


குறும்படம் 4 :

நன்றி : எஸ்.ரா

1 comment நவம்பர் 30, 2008


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !