Posts filed under 'Uncategorized'
அடியே கொல்லுதே – வாரணம் ஆயிரம்
அடியே கொல்லுதே
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்தது
உன் நேசம் என்றது
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது
என்மீது பாய்ந்தது
மழைக்காலத்தில் சரியும்
மண் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக்
கண்டேனே
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
சொன்ன வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….
Add comment டிசம்பர் 2, 2008